25 ஜனவரி, 2012

புத்தகத் திருவிழா!

திருப்பூரில் சனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, டைமண்ட் திரையரங்கம் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சென்டரில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியை முன்னிலைப்படுத்துவதில் சேர்தளமும், வரவேற்புக் குழுவினருடன் கை கோர்க்கிறது.






அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.

19 ஜனவரி, 2012

விவாத அரங்கம்

அன்புள்ள இணைய எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு!

      திருப்பூர் புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்களை தெரிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012, வரும் சன 25 ஆம் தேதி துவங்குகிறது. நூற்றுக்கும் அதிகமான புத்தகக் கடைகள், பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்களோடு ஒரு தேனடை போல தயாரிப்பு ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன.

     உங்கள் எழுத்துக்கள் மேம்பட இந்தக் கண்காட்சி இதுவரைக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவியிருக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் கண்காட்சிக்கு வருக! என எங்கள் அன்பான அழைப்பை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.
 
 

     சமூகத்தின் மேம்பாட்டுக்கு பேருதவியாகவும், கடந்த காலத்தின் அனுபவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாங்கிச்செல்லும் ஊடகமாகவும் புத்தகங்கள் உள்ளன. இப்படி வரலாற்றின் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் புத்தகங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப வாசிப்பும், விற்பனையும் மாற வேண்டும் என நமக்கு கற்பிக்கிறது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சியிலும் வருடத்திற்கு வருடம் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

     திருப்பூரின் வாசகர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்காட்சியை வெற்றிகரமாக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளனர். சமூக நோக்குடன் கண்காட்சியை நடத்தும் பொருட்டு, பலரின் உதவியுடனே, இந்தக் காட்சி தொடர்ந்து நடக்கிறது. புத்தக அரங்கின் பகுதியாக முதலில் குறும்படங்களுக்கும் சிறப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு முதல் சூழலியல் சார்ந்த கண்காட்சிகள் நடக்கின்றன. (இந்த ஆண்டு கானுயிர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது).

    அத்துடன், புதிய ஊடகமும், வளர்ந்துவரும் ஊடகமுமான இணையதளத்தில் பேஸ்புக் பயனர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள், வாசகர்களையும் கண்காட்சி குழுவோடு இணைந்து செயல்பட அழைக்கிறோம். வரும் சன.25 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி நடக்கிறது. எனவே அதற்கு முன்பாக, வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ”புத்தகக் கண்காட்சியும்   புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது. 

வரவேற்பு:

ச.நந்தகோபால்
இணைச் செயலாளர்
புத்தகக் கண்காட்சி 2012
 
பங்கேற்பு:
 எஸ்.முத்துக்கண்ணன்
வரவேற்புகுழு செயலாளர்
திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012

கணேஷ் 
ஊடகவியலாளர்

வெயிலான் ரமேஷ்
 தலைவர், சேர்தளம்

நன்றியுரை: திரு.ஜெயராமன், வரவேற்புக் குழு

அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். 

இப்படிக்கு அன்புத்தம்பி :)
இரா.சிந்தன்
வரவேற்புக் குழு இணைச் செயலாளர்.