புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
31 ஜனவரி, 2014
11வது திருப்பூர் புத்தகத் திருவிழா
31 சனவரி 2014 முதல் 09 பிப்ரவரி வரை திருப்பூரில் திருவிழா!
11வது புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது.
வாசிப்பவர்களுக்கும், வாசிக்க விருப்பம் உடையவர்களுக்கும் மட்டுமில்லாமல், பார்வையாளர்களும் விரும்பும் வகையில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், உலகத்திரைப்படங்கள், நம்ம திருப்பூர் எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி என
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.
புதிதாக வாசிக்க ஆர்வமிருப்பவர்களுக்கு என்ன புத்தகம்? என்பது தொடங்கி எந்தெந்த புத்தகங்கள், எந்தெந்த கடைகளில் கிடைக்கும் என்பதுவரை பார்வையாளர்களுக்கு உதவுவதற்காகவே இணைய நண்பர்களுக்கும், சேர்தளத்திற்கும் தனி அரங்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் தேடலை எளிமையாக்க நாங்கள் காத்திருக்கிறோம்...
அனைவரும் வருகவென சேர்தளம் இணையக் குழுமம் சார்பாகவும், புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழு சார்பாகவும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி!
Labels:
அழைப்பிதழ்,
அறிவிப்பு,
சேர்தளம்,
புத்தகக் கண்காட்சி,
Serdhalam,
Tiruppur,
tirupurbookfair
20 டிசம்பர், 2013
திருப்பூர் புத்தகத் திருவிழா - 2014
Labels:
அழைப்பிதழ்,
அறிவிப்பு,
சேர்தளம்,
புத்தகக் கண்காட்சி,
book fair,
Serdhalam,
Serthalam,
Tiruppur
10 ஜனவரி, 2013
20 மார்ச், 2012
கணினி பற்றிய கலந்துரையாடல்
கணினியும் கலப்பையும்- கருத்தரங்கம் - வெண்புரவி அருணா
நேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.
பின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது. இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.
முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார். கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார். அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது. அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.
முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார். கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார். அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது. அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.
ஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது. ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது. எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது. பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது. ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது. நடந்ததைக் கேட்ட பசு "பால் தருகிறேன். ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா" என்கிறது.
எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது. புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது. இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது. அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது. எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது. அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது. ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன். ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன். ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது. எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது. அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது. கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது. (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே). கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது. பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது. ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது. கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.
அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார். அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.
எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது. புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது. இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது. அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது. எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது. அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது. ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன். ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன். ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது. எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது. அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது. கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது. (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே). கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது. பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது. ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது. கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.
அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார். அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.
"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம். காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார். அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன். தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது. (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார். இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார். அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள். இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது. நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை. இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள். நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்"
இப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.
அடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார். இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர். எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும். மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார். மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார். நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார். நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.
தமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார். ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார். இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.
சிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.
இதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும். நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று. நீங்கள்?
Labels:
கணினி,
கலந்துரையாடல்,
புத்தகக் கண்காட்சி
19 ஜனவரி, 2012
விவாத அரங்கம்
அன்புள்ள இணைய எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு!
திருப்பூர் புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்களை தெரிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012, வரும் சன 25 ஆம் தேதி துவங்குகிறது. நூற்றுக்கும் அதிகமான புத்தகக் கடைகள், பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்களோடு ஒரு தேனடை போல தயாரிப்பு ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன.
உங்கள் எழுத்துக்கள் மேம்பட இந்தக் கண்காட்சி இதுவரைக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவியிருக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் கண்காட்சிக்கு வருக! என எங்கள் அன்பான அழைப்பை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.
சமூகத்தின் மேம்பாட்டுக்கு பேருதவியாகவும், கடந்த காலத்தின் அனுபவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாங்கிச்செல்லும் ஊடகமாகவும் புத்தகங்கள் உள்ளன. இப்படி வரலாற்றின் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் புத்தகங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப வாசிப்பும், விற்பனையும் மாற வேண்டும் என நமக்கு கற்பிக்கிறது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சியிலும் வருடத்திற்கு வருடம் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
திருப்பூரின் வாசகர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்காட்சியை வெற்றிகரமாக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளனர். சமூக நோக்குடன் கண்காட்சியை நடத்தும் பொருட்டு, பலரின் உதவியுடனே, இந்தக் காட்சி தொடர்ந்து நடக்கிறது. புத்தக அரங்கின் பகுதியாக முதலில் குறும்படங்களுக்கும் சிறப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு முதல் சூழலியல் சார்ந்த கண்காட்சிகள் நடக்கின்றன. (இந்த ஆண்டு கானுயிர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது).
அத்துடன், புதிய ஊடகமும், வளர்ந்துவரும் ஊடகமுமான இணையதளத்தில் பேஸ்புக் பயனர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள், வாசகர்களையும் கண்காட்சி குழுவோடு இணைந்து செயல்பட அழைக்கிறோம். வரும் சன.25 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி நடக்கிறது. எனவே அதற்கு முன்பாக, வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ”புத்தகக் கண்காட்சியும் புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது.
வரவேற்பு:
ச.நந்தகோபால்
இணைச் செயலாளர்
புத்தகக் கண்காட்சி 2012
பங்கேற்பு:
எஸ்.முத்துக்கண்ணன்
வரவேற்புகுழு செயலாளர்
திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012
கணேஷ்
ஊடகவியலாளர்
வெயிலான் ரமேஷ்
தலைவர், சேர்தளம்
நன்றியுரை: திரு.ஜெயராமன், வரவேற்புக் குழு
அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு அன்புத்தம்பி :)
இரா.சிந்தன்
வரவேற்புக் குழு இணைச் செயலாளர்.
Labels:
திருப்பூர்,
புத்தகக் கண்காட்சி,
book fair,
Tirupur
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








