Tirupur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tirupur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜனவரி, 2013

நூல் விமர்சனக் கூட்டம்

சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.



27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

19 ஜனவரி, 2012

விவாத அரங்கம்

அன்புள்ள இணைய எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு!

      திருப்பூர் புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்களை தெரிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012, வரும் சன 25 ஆம் தேதி துவங்குகிறது. நூற்றுக்கும் அதிகமான புத்தகக் கடைகள், பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்களோடு ஒரு தேனடை போல தயாரிப்பு ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன.

     உங்கள் எழுத்துக்கள் மேம்பட இந்தக் கண்காட்சி இதுவரைக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவியிருக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் கண்காட்சிக்கு வருக! என எங்கள் அன்பான அழைப்பை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.
 
 

     சமூகத்தின் மேம்பாட்டுக்கு பேருதவியாகவும், கடந்த காலத்தின் அனுபவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாங்கிச்செல்லும் ஊடகமாகவும் புத்தகங்கள் உள்ளன. இப்படி வரலாற்றின் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் புத்தகங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப வாசிப்பும், விற்பனையும் மாற வேண்டும் என நமக்கு கற்பிக்கிறது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சியிலும் வருடத்திற்கு வருடம் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

     திருப்பூரின் வாசகர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்காட்சியை வெற்றிகரமாக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளனர். சமூக நோக்குடன் கண்காட்சியை நடத்தும் பொருட்டு, பலரின் உதவியுடனே, இந்தக் காட்சி தொடர்ந்து நடக்கிறது. புத்தக அரங்கின் பகுதியாக முதலில் குறும்படங்களுக்கும் சிறப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு முதல் சூழலியல் சார்ந்த கண்காட்சிகள் நடக்கின்றன. (இந்த ஆண்டு கானுயிர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது).

    அத்துடன், புதிய ஊடகமும், வளர்ந்துவரும் ஊடகமுமான இணையதளத்தில் பேஸ்புக் பயனர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள், வாசகர்களையும் கண்காட்சி குழுவோடு இணைந்து செயல்பட அழைக்கிறோம். வரும் சன.25 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி நடக்கிறது. எனவே அதற்கு முன்பாக, வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ”புத்தகக் கண்காட்சியும்   புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது. 

வரவேற்பு:

ச.நந்தகோபால்
இணைச் செயலாளர்
புத்தகக் கண்காட்சி 2012
 
பங்கேற்பு:
 எஸ்.முத்துக்கண்ணன்
வரவேற்புகுழு செயலாளர்
திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012

கணேஷ் 
ஊடகவியலாளர்

வெயிலான் ரமேஷ்
 தலைவர், சேர்தளம்

நன்றியுரை: திரு.ஜெயராமன், வரவேற்புக் குழு

அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். 

இப்படிக்கு அன்புத்தம்பி :)
இரா.சிந்தன்
வரவேற்புக் குழு இணைச் செயலாளர்.

16 மார்ச், 2011

வண்ணமிழந்த வளநகர்

கவிஞர். மகுடேசுவரன் திருப்பூரின் சாய ஆலை மூடல் பிரச்சனை குறித்து எழுதியது.
நேற்று அலைபேசிய சுதாகர், ‘என்னடா மாப்பிள்ள… ஒரு வீட்டுக் கடன் இருக்கு. ஒரு வாகனக் கடன் இருக்கு. மாட்டிக்கிட்டேன் போலிருக்கே…’ என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இன்று காலையில் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்திய இளைஞர்கள் இருவர் ‘டையிங்ல வேலை இல்லேன்னுட்டாங்க… ஏதாவது சில்லறை வேலை இருந்தா கொடுங்க… செய்றோங்க…’ என்று கேட்டார்கள். வாரந்தோறும் வீட்டுக்குப் பணவஞ்சல் அனுப்பிய அவர்கள் ஒரே வாரத்தில் பிச்சைக்காரர்களைப் போலாகி நின்றது என் நெஞ்சை அரித்தது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறுபேர் திருப்பூர் போடும் சோற்றைத்தான் உண்ணுகிறார்கள் என்கிற பேருண்மையை நாம் பெருந்தகைமை கொண்டு பார்க்க வேண்டும். பேருந்தை விட்டிறங்கியதும் உங்களை வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஒரே நகரமல்லவா இது ?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=78

நிறமிழக்கும் பின்னல் நகரம்

திருப்பூரைப் பற்றி மணல் கடிகை என்ற நாவல் எழுதிய எம். கோபாலகிருஷ்ணன் தற்போதைய திருப்பூரின் நிலை குறித்து எழுதியது.

இன்றைய திருப்பூரில் உள்ள தொழிலாளிகளில் 60 சதத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், தேனி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி என்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு இடம் பெயர்ந்துள்ளனர். வாரச் சம்பளத்தை நம்பி உள்ள இவர்கள் அனைவரும் அதிகபட்சம் ஒரு மாத காலம் வேலையின்றித் தாக்குப் பிடிக்க முடியும். அதன் பிறகு அவர்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியிருக்காது.

தீர்ப்பு வெளியான நாளிலிருந்து இன்று வரை சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத ஒவ்வொரு நாளும் அந்நியச் செலாவணி இழப்பு கோடிக்கணக்கில் ஏற்படுவது உறுதி. அதைவிட, தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் மறைந்து கொண்டிருப்பது வேதனையானது. திருப்பூர் தனது தொழில் வளர்ச்சியை இழந்துவிடுமா?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=76