சேர்தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேர்தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
31 ஜனவரி, 2014
11வது திருப்பூர் புத்தகத் திருவிழா
31 சனவரி 2014 முதல் 09 பிப்ரவரி வரை திருப்பூரில் திருவிழா!
11வது புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது.
வாசிப்பவர்களுக்கும், வாசிக்க விருப்பம் உடையவர்களுக்கும் மட்டுமில்லாமல், பார்வையாளர்களும் விரும்பும் வகையில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், உலகத்திரைப்படங்கள், நம்ம திருப்பூர் எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி என
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.
புதிதாக வாசிக்க ஆர்வமிருப்பவர்களுக்கு என்ன புத்தகம்? என்பது தொடங்கி எந்தெந்த புத்தகங்கள், எந்தெந்த கடைகளில் கிடைக்கும் என்பதுவரை பார்வையாளர்களுக்கு உதவுவதற்காகவே இணைய நண்பர்களுக்கும், சேர்தளத்திற்கும் தனி அரங்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் தேடலை எளிமையாக்க நாங்கள் காத்திருக்கிறோம்...
அனைவரும் வருகவென சேர்தளம் இணையக் குழுமம் சார்பாகவும், புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழு சார்பாகவும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி!
Labels:
அழைப்பிதழ்,
அறிவிப்பு,
சேர்தளம்,
புத்தகக் கண்காட்சி,
Serdhalam,
Tiruppur,
tirupurbookfair
20 டிசம்பர், 2013
திருப்பூர் புத்தகத் திருவிழா - 2014
Labels:
அழைப்பிதழ்,
அறிவிப்பு,
சேர்தளம்,
புத்தகக் கண்காட்சி,
book fair,
Serdhalam,
Serthalam,
Tiruppur
18 டிசம்பர், 2013
விஷ்ணுபுரம் விருது - 2013
2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் - ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து....
டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்)
நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!
Labels:
சேர்தளம்,
விஷ்ணுபுரம்,
announcement,
Serdhalam,
Serthalam,
Vishnupuram
26 ஜனவரி, 2013
நூல் விமர்சனக் கூட்டம்
சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.
27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.
27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.
Labels:
அழைப்பிதழ,
கலந்துரையாடல்,
செய்தி,
சேர்தளம்,
திருப்பூர்,
நிகழ்வுகள்,
Tirupur
நூல் வெளியீடு
Labels:
அழைப்பிதழ்,
சேர்தளம்,
திருப்பூர்,
நிகழ்வுகள்,
Serthalam,
Tiruppur
11 டிசம்பர், 2012
விஷ்ணுபுரம் விருது - 2012
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர். நாஞ்சில்நாடன்
ஜா. ராஜகோபாலன்
விமர்சகர். மோகனரங்கன்
ஜா. ராஜகோபாலன்
விமர்சகர். மோகனரங்கன்
இயக்குனர். சுகா
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
இசைஞானி. இளையராஜா
எழுத்தாளர். ஜெயமோகன்
கவிஞர். தேவதேவன்
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
இசைஞானி. இளையராஜா
எழுத்தாளர். ஜெயமோகன்
கவிஞர். தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Labels:
சேர்தளம்,
விருது,
விஷ்ணுபுரம்,
Serthalam
5 ஏப்ரல், 2012
விழாத் துளிகள்!
வெறும் வார்த்தைகளில் முடிவதில்லை - நன்றி
- விஜி ராம்
நன்றி - இந்த ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கமுடியுமா? இருந்தாலும் முடிந்தவரை என் நன்றியை தெரிவிக்கமுயல்கிறேன்.
இணையத்தில் அறிமுகமாகி இதுவரை நேரில் கூட பார்த்திராத நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழுமம் என்ன செய்யலாம் - இதுதான் பெயரே. இதுவரை ஒரு பெயர் கூட வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. எங்கள் நோக்கம் எங்கள் அளவில் நிறைவேறுகிறது. அது போதும். எந்த தேவையற்ற பேச்சும் இந்த குழுமத்தில் இருக்காது. தினேஷ், கே.விஆர், ஜோசப், அகிலா, மதார், அப்துல்லா, வெயிலான், வித்யா, பபாஷா இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த குழுமத்தில் இருந்து வந்ததுதான் நேசம். இந்த நண்பர்களின் முழு ஆதரவோடு கோவையிலிருந்து இயக்கப்படுகிறது. முழுக்க முழுக்க புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்று ஆரம்பித்தது, ஆனால் எந்த வியாதிகளூக்கு அல்லது மருத்துவ ரீதியாக எதற்கு விழிப்புணர்வு தேவையோ அதை இனி செய்வோம்.
தேங்க்ஸ் மக்களே உங்க இந்த சப்போர்ட் இல்லனா இது சாத்தியம் இல்லை.
விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி நடத்துவதாக அறிவித்தாகிவிட்டது. நடுவர்கள் என்று யோசிக்கும் போதே தோன்றியவர்கள் ஸ்ரீதர் நாராயணன், பாலபாரதி மற்றும் வெயிலான் ரமேஷ். இவர்கள் கட்டாயம் மிகச்சிறப்பாக மிக நடுநிலையான விமர்சனம் தருவார்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கடுமையான பணி சூழலிலும் மூவரும் ஒவ்வொரு கதையைபற்றியும் விவாதித்து மதிப்பெண்கள் அளித்து, தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளூக்கும் அவர்களின் கருத்துகளை தெரிவித்து... அவர்களின் சிரத்தையும் மெனக்கெடலுமே இந்த போட்டியை நல்ல முறையில் நடத்திக்கொடுத்தது.
கட்டுரை போட்டியின் நடுவர்களான டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ. இவர்களின் மிகக்கடுமையான பணிகளுக்கும் பயணங்களுக்கும் நடுவில் கட்டுரைகளின் தரங்களை மதிப்பிட்டு, அதன் உண்மைத்தன்மையை விளக்கி மிகசிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்தனர்.
நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீதர், பாலபாரதி, வெயிலான், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.
திருப்பூரில் இந்த பரிசளிப்பை நடத்தலாம் என்று முடிவுசெய்தவுடன் சேர்தளம் நண்பர்கள் விழாவில் கலந்து கொள்ள மட்டும் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இடம் ஏற்பாடு செய்து லைட்டின், மைக், ஜென்ரேட்டர், விருந்தினர்கள் என்று பார்த்து பார்த்து செய்த திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், முரளி, செந்தில்,செல்வம், பரிசல், ராமன், இன்னும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நேற்றைய விழா :

மாலை 5.30க்கு ஆரம்பித்த விழா முதலில் செல்வம் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து முரளியின் வரவேறுபு உரை.
புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றிய டாக்டர். கலைச்செல்விஅவர்கள் (குமரன் மருத்துவமனை - திருப்பூர்) புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், முன்கூட்டியே கண்டறிந்தால் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த கூடியது என்றும், ஒரு முறை சிகிச்சை எடுத்து குணமானவர்கள் மறுபடியும் குறைந்தது 5 வருடங்கள் மீண்டும் தொடர் சிகிச்சையில் இருக்க
வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பரிசும், சான்றிதழும் விழா விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.
கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. மோகனா அவர்கள் - பழனியாண்டவர் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியை, 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் துறையில் இருப்பவர். இவர் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர். இவரது உரையில் ஆண்களுக்கான மார்பு புற்றுநோய் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

விழாவுக்கு தலைமை ஏற்ற திரு,.பி.ஆர்.கணேசன் அவர்களின் உரை அனைவரையும் மிக கனத்த மனநிலைக்கு கொண்டு சென்றது. புற்றுநோயால் அவர் தந்தை, சிறிய தந்தையர்கள் இருவர் மற்றும் அவரின் 21 வயது மகளை இழந்தது. புற்றுநோயின் வேதனை, போராட்டம் பற்றி அவரின் அனுபவங்கள் வந்திருந்த அனைவரையும் மனம் பதற செய்தது. புற்றுநோயின் விழிப்புணர்வின் அவசியத்தை மிக நெகிழ்வாக விளக்கினார்
.

இதனை தொடர்ந்து 15,வேலம்பாளையம் திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவர்களின் தப்பாட்டம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மற்றுமன்றி அந்தபகுதியில் உள்ளவர்களையும் விழா அரங்கிற்கு இழுத்துவந்த நிகழ்வு. தப்பாட்டம் மற்றும் புதுக்கோட்டையின் பாரம்பரிய நடனமான சில்லாட்டம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பதிவர் பரிசல் கிருஷ்ணாவின் நன்றியுரையுடன் நேசம் பரிசளிப்பு விழா சேர்தளம் சொந்தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்புடன் முடிவடைந்தது. சேர்தளம், டாக்டர் கலைச்செல்வி, திரு.கணேசன், நிகழ்காலத்தில் சிவா, மற்றும் இவ்விழாவில் செயல்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த போட்டியின் பரிசுத்தொகை கதை போட்டியின் முதல் மூன்று பரிசுகளை தந்த யுடான்ஸ் ஜோசப், கட்டுரை போட்டியின் முதல் பரிசை ஏற்ற பதிவர் ஓ.ஆர்.பி.ராஜா, மற்றும் அனைத்து ஆறுதல் பரிசுகளையும் தன் பங்காக தந்துதவிய பதிவர் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
நேசம் முதல் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பில்லாத போது நம்பிக்கை அளித்த ஸ்வாமிஓம்கார். பேரே சொல்லக்கூடாது என்னும் நிபந்தனையுடன் நேசம் இலச்சினை வடிவமைத்த கோபி, ஆதவன், நேற்றைய விழாவில் பேருதவி செய்த முரளியின் மைத்துனரும், செந்திலின் உறவினர் சகோதரனும், இந்த விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கோபி, குறும்படம் இயக்கிய அனந்து, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும். பரிசு பெற்றவர்களுக்கும் நேசம் சார்பில் வாழ்த்தும் நன்றிகளும்.
ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் வெகு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது உங்கள் அனைவரின் ஆதரவே காரணம். மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இது போன்றே வரப்போகும் நாட்களிலும் எங்களால் இயன்ற பணிகளை செய்வோம், உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.
நன்றி!!!
நன்றி நண்பர்களே
இணையத்தில் அறிமுகமாகி இதுவரை நேரில் கூட பார்த்திராத நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழுமம் என்ன செய்யலாம் - இதுதான் பெயரே. இதுவரை ஒரு பெயர் கூட வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. எங்கள் நோக்கம் எங்கள் அளவில் நிறைவேறுகிறது. அது போதும். எந்த தேவையற்ற பேச்சும் இந்த குழுமத்தில் இருக்காது. தினேஷ், கே.விஆர், ஜோசப், அகிலா, மதார், அப்துல்லா, வெயிலான், வித்யா, பபாஷா இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த குழுமத்தில் இருந்து வந்ததுதான் நேசம். இந்த நண்பர்களின் முழு ஆதரவோடு கோவையிலிருந்து இயக்கப்படுகிறது. முழுக்க முழுக்க புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்று ஆரம்பித்தது, ஆனால் எந்த வியாதிகளூக்கு அல்லது மருத்துவ ரீதியாக எதற்கு விழிப்புணர்வு தேவையோ அதை இனி செய்வோம்.
தேங்க்ஸ் மக்களே உங்க இந்த சப்போர்ட் இல்லனா இது சாத்தியம் இல்லை.
நன்றி நடுவர்களே
விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி நடத்துவதாக அறிவித்தாகிவிட்டது. நடுவர்கள் என்று யோசிக்கும் போதே தோன்றியவர்கள் ஸ்ரீதர் நாராயணன், பாலபாரதி மற்றும் வெயிலான் ரமேஷ். இவர்கள் கட்டாயம் மிகச்சிறப்பாக மிக நடுநிலையான விமர்சனம் தருவார்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கடுமையான பணி சூழலிலும் மூவரும் ஒவ்வொரு கதையைபற்றியும் விவாதித்து மதிப்பெண்கள் அளித்து, தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளூக்கும் அவர்களின் கருத்துகளை தெரிவித்து... அவர்களின் சிரத்தையும் மெனக்கெடலுமே இந்த போட்டியை நல்ல முறையில் நடத்திக்கொடுத்தது.
கட்டுரை போட்டியின் நடுவர்களான டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ. இவர்களின் மிகக்கடுமையான பணிகளுக்கும் பயணங்களுக்கும் நடுவில் கட்டுரைகளின் தரங்களை மதிப்பிட்டு, அதன் உண்மைத்தன்மையை விளக்கி மிகசிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்தனர்.
நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீதர், பாலபாரதி, வெயிலான், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.
நன்றி சேர்தளம்
நேற்றைய விழா :

மாலை 5.30க்கு ஆரம்பித்த விழா முதலில் செல்வம் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து முரளியின் வரவேறுபு உரை.
புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றிய டாக்டர். கலைச்செல்விஅவர்கள் (குமரன் மருத்துவமனை - திருப்பூர்) புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், முன்கூட்டியே கண்டறிந்தால் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த கூடியது என்றும், ஒரு முறை சிகிச்சை எடுத்து குணமானவர்கள் மறுபடியும் குறைந்தது 5 வருடங்கள் மீண்டும் தொடர் சிகிச்சையில் இருக்க
வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பரிசும், சான்றிதழும் விழா விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.
கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. மோகனா அவர்கள் - பழனியாண்டவர் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியை, 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் துறையில் இருப்பவர். இவர் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர். இவரது உரையில் ஆண்களுக்கான மார்பு புற்றுநோய் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

விழாவுக்கு தலைமை ஏற்ற திரு,.பி.ஆர்.கணேசன் அவர்களின் உரை அனைவரையும் மிக கனத்த மனநிலைக்கு கொண்டு சென்றது. புற்றுநோயால் அவர் தந்தை, சிறிய தந்தையர்கள் இருவர் மற்றும் அவரின் 21 வயது மகளை இழந்தது. புற்றுநோயின் வேதனை, போராட்டம் பற்றி அவரின் அனுபவங்கள் வந்திருந்த அனைவரையும் மனம் பதற செய்தது. புற்றுநோயின் விழிப்புணர்வின் அவசியத்தை மிக நெகிழ்வாக விளக்கினார்
.

இதனை தொடர்ந்து 15,வேலம்பாளையம் திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவர்களின் தப்பாட்டம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மற்றுமன்றி அந்தபகுதியில் உள்ளவர்களையும் விழா அரங்கிற்கு இழுத்துவந்த நிகழ்வு. தப்பாட்டம் மற்றும் புதுக்கோட்டையின் பாரம்பரிய நடனமான சில்லாட்டம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பதிவர் பரிசல் கிருஷ்ணாவின் நன்றியுரையுடன் நேசம் பரிசளிப்பு விழா சேர்தளம் சொந்தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்புடன் முடிவடைந்தது. சேர்தளம், டாக்டர் கலைச்செல்வி, திரு.கணேசன், நிகழ்காலத்தில் சிவா, மற்றும் இவ்விழாவில் செயல்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த போட்டியின் பரிசுத்தொகை கதை போட்டியின் முதல் மூன்று பரிசுகளை தந்த யுடான்ஸ் ஜோசப், கட்டுரை போட்டியின் முதல் பரிசை ஏற்ற பதிவர் ஓ.ஆர்.பி.ராஜா, மற்றும் அனைத்து ஆறுதல் பரிசுகளையும் தன் பங்காக தந்துதவிய பதிவர் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
நேசம் முதல் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பில்லாத போது நம்பிக்கை அளித்த ஸ்வாமிஓம்கார். பேரே சொல்லக்கூடாது என்னும் நிபந்தனையுடன் நேசம் இலச்சினை வடிவமைத்த கோபி, ஆதவன், நேற்றைய விழாவில் பேருதவி செய்த முரளியின் மைத்துனரும், செந்திலின் உறவினர் சகோதரனும், இந்த விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கோபி, குறும்படம் இயக்கிய அனந்து, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும். பரிசு பெற்றவர்களுக்கும் நேசம் சார்பில் வாழ்த்தும் நன்றிகளும்.
ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் வெகு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது உங்கள் அனைவரின் ஆதரவே காரணம். மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இது போன்றே வரப்போகும் நாட்களிலும் எங்களால் இயன்ற பணிகளை செய்வோம், உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.
நன்றி!!!
30 மார்ச், 2012
28 செப்டம்பர், 2011
எஸ்.ரா., தாகூர் விருது பெற்றமைக்கு பாராட்டு விழா!!!!
மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.
91 ஆயிரம் ரொக்கப்பணமும், தாகூர் உருவச்சிலையும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்.
2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.
யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கிய விருது தமிழுக்கு முதன்முறையாக எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
அவ்விருது பெற்றமைக்கு சேர்தளம்-திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் சார்பில் பாராட்டு விழாவும், வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலும் திருப்பூரில் 25 செப்டம்பர் 2011 அன்று நடந்தது.
ஓவியர் திரு. வீரப்பன் ஐயா, தானே வரைந்த ஓவியத்தை எஸ்.ராவுக்கு பரிசளித்தார்.
நிகழ்ச்சி குறித்த தினமணி நாளிதழ்ச் செய்தி!
91 ஆயிரம் ரொக்கப்பணமும், தாகூர் உருவச்சிலையும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்.
2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.
யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கிய விருது தமிழுக்கு முதன்முறையாக எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
அவ்விருது பெற்றமைக்கு சேர்தளம்-திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் சார்பில் பாராட்டு விழாவும், வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலும் திருப்பூரில் 25 செப்டம்பர் 2011 அன்று நடந்தது.
ஓவியர் திரு. வீரப்பன் ஐயா, தானே வரைந்த ஓவியத்தை எஸ்.ராவுக்கு பரிசளித்தார்.
நிகழ்ச்சி குறித்த தினமணி நாளிதழ்ச் செய்தி!
Labels:
எஸ்.ரா.,
எஸ்.ராமகிருஷ்ணன்,
சேர்தளம்,
தாகூர் விருது,
தினமணி,
dinamani,
s.ramakrishnan,
Serdhalam,
Serthalam
29 டிசம்பர், 2010
நிகழ்வின் நிழல்கள்
ஈரோடில் 26 திசம்பர் 2010 அன்று நடைபெற்ற சங்கமம் விழாவில் ‘சேர்தளம்’ நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது. செல்வத்தின் சீரிய ஒருங்கிணைப்பில், முரளியின் எண்ணங்கள், வண்ணங்கள் உதவியுடன் கலந்துரையாடல் களை கட்டியது. நிகழ்வின் புகைப்படங்கள் சில.
நன்றி - http://koozhaankarkal.com/ மற்றும் ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.
நன்றி - http://koozhaankarkal.com/ மற்றும் ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.
Labels:
சங்கமம்,
சேர்தளம்,
நிகழ்வுகள்,
Serthalam
21 டிசம்பர், 2010
ஒரு கூடு
இணைய வெளியில் இறக்கைகளின்றி பறந்து திரியும் நாமனைவரும் இருபத்தியாறாம் தேதி ஒரு கூடு அடைவோம். இம்முறை ஈரோடில் இணைவோம்.
வரும் ஞாயிறு 26ம் தேதி ஈரோடில் “சங்கமம்” நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
நிகழ்விடம்:
நிகழ்ச்சி நிரல்:
காலை 11 மணி - நிகழ்ச்சி தொடக்கம்
தமிழ் வணக்கம் / வரவேற்புரை /
பதிவர்கள் அறிமுகம் / கூட்ட துவக்க உரை
முதலாம் அமர்வு
சிறுகதைகளை உருவாக்குவோம் - எழுத்தாளர்.பெருமாள் முருகன்
உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் - எழுத்தாளர். பாமரன்
வரும் ஞாயிறு 26ம் தேதி ஈரோடில் “சங்கமம்” நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
நிகழ்விடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை,
ஈரோடு.
நிகழ்ச்சி நிரல்:
காலை 11 மணி - நிகழ்ச்சி தொடக்கம்
தமிழ் வணக்கம் / வரவேற்புரை /
பதிவர்கள் அறிமுகம் / கூட்ட துவக்க உரை
முதலாம் அமர்வு
சிறுகதைகளை உருவாக்குவோம் - எழுத்தாளர்.பெருமாள் முருகன்
உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் - எழுத்தாளர். பாமரன்
குறும்படம் எடுக்கலாம் வாங்க - அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
நிழற்படங்களில் நேர்த்தி - ’கருவாயன்’ - சுரேஷ்பாபு
உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை - சிதம்பரன்.கி
மணி 1.30 - 2.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு
இன்றைய இணையமும் வலைப்பூக்களும் - ஓசை செல்லா
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் - லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு
பதிவர்கள் கலந்துரையாடல் - ஒருங்கிணைப்பு ’சேர்தளம்’
மாலை 5.00 மணி - நன்றியுரை / நிகழ்ச்சி நிறைவு.
நிழற்படங்களில் நேர்த்தி - ’கருவாயன்’ - சுரேஷ்பாபு
உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை - சிதம்பரன்.கி
மணி 1.30 - 2.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு
இன்றைய இணையமும் வலைப்பூக்களும் - ஓசை செல்லா
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் - லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு
பதிவர்கள் கலந்துரையாடல் - ஒருங்கிணைப்பு ’சேர்தளம்’
மாலை 5.00 மணி - நன்றியுரை / நிகழ்ச்சி நிறைவு.
30 ஆகஸ்ட், 2010
சேர்தளம் நிகழ்வு - பத்திரிக்கைச் செய்தி
சேர்தளம் வலைப்பதிவர் பட்டறை - "தினமலர்' பத்திரிக்கையில்......
புகைப்படக்காரருக்கும், கட்டுரையாளருக்கும், பங்கேற்பாளர்களுக்கும்
சேர்தளம் சார்பில் நன்றி!
நிகழ்வு குறித்து - பரிசல்காரன் - http://www.parisalkaaran.com/2010/08/blog-post_30.html
புகைப்படக்காரருக்கும், கட்டுரையாளருக்கும், பங்கேற்பாளர்களுக்கும்
சேர்தளம் சார்பில் நன்றி!
நிகழ்வு குறித்து - பரிசல்காரன் - http://www.parisalkaaran.com/2010/08/blog-post_30.html
Labels:
சேர்தளம்,
பத்திரிக்கை,
வலைப்பதிவர்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





















