சங்கமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 டிசம்பர், 2011

ஈரோடு சங்கமம் - 2011

ஈரோடு வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் சங்கமம் விழா இவ்வருடமும், 18 திசம்பர் 2011 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது.



நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என பிரம்மாண்டமாய் நிகழவிருக்கிறது.


அனைவரும் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

29 டிசம்பர், 2010

நிகழ்வின் நிழல்கள்

ஈரோடில் 26 திசம்பர் 2010 அன்று நடைபெற்ற சங்கமம் விழாவில் ‘சேர்தளம்’ நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது.  செல்வத்தின் சீரிய ஒருங்கிணைப்பில், முரளியின் எண்ணங்கள், வண்ணங்கள் உதவியுடன் கலந்துரையாடல் களை கட்டியது.  நிகழ்வின் புகைப்படங்கள் சில. 


 
 

 
 
 

நன்றி - http://koozhaankarkal.com/ மற்றும் ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.

21 டிசம்பர், 2010

ஒரு கூடு

இணைய வெளியில் இறக்கைகளின்றி பறந்து திரியும் நாமனைவரும் இருபத்தியாறாம் தேதி ஒரு கூடு அடைவோம். இம்முறை ஈரோடில் இணைவோம்.



வரும் ஞாயிறு 26ம் தேதி ஈரோடில் “சங்கமம்” நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

நிகழ்விடம்:  
டைஸ் & கெமிக்கல் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை,
ஈரோடு.


நிகழ்ச்சி நிரல்:

காலை 11 மணி - நிகழ்ச்சி தொடக்கம் 


தமிழ் வணக்கம் / வரவேற்புரை
பதிவர்கள் அறிமுகம் / கூட்ட துவக்க உரை


முதலாம் அமர்வு

சிறுகதைகளை உருவாக்குவோம் - எழுத்தாளர்.பெருமாள் முருகன்
உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் -  எழுத்தாளர். பாமரன்

குறும்படம் எடுக்கலாம் வாங்க - அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
நிழற்படங்களில் நேர்த்தி - கருவாயன்’ - சுரேஷ்பாபு
உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை - சிதம்பரன்.கி

மணி 1.30 - 2.30 மதிய உணவு

 

இரண்டாம் அமர்வு
 
இன்றைய இணையமும் வலைப்பூக்களும் - ஓசை செல்லா
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் - லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)



மூன்றாம் அமர்வு

பதிவர்கள் கலந்துரையாடல் - ஒருங்கிணைப்பு ’சேர்தளம்’

மாலை 5.00 மணி - நன்றியுரை / நிகழ்ச்சி நிறைவு
.

உங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு - ஈரோடு வலைப்பதிவர்கள்.