20 டிசம்பர், 2013

திருப்பூர் புத்தகத் திருவிழா - 2014

திருப்பூரில் நடைபெறவிருக்கும் புத்தகத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.


18 டிசம்பர், 2013

விஷ்ணுபுரம் விருது - 2013


2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் - ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து....


டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்)

நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!

26 ஜனவரி, 2013

நூல் விமர்சனக் கூட்டம்

சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.



27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

நூல் வெளியீடு

திருப்பூரில் “சேர்தளத்துடன்” இணைந்து....


27.01.2013 அன்று காலை 9.30 மணிக்கு, திருப்பூர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தக வெளியீட்டு விழா.

அனைவரும் வருக்!!!!!

10 ஜனவரி, 2013

திருப்பூர் புத்தகத் திருவிழா - 2013

10 வது திருப்பூர் புத்தகத் திருவிழா, 25 ஜனவரி முதல் 3 பிப்ரவரி 2013 வரை நடைபெறவிருக்கிறது.

இடம் - கே.ஆர்.சி. சிட்டி சென்டர் - டைமண்ட் தியேட்டர் எதிரில்



சேர்தளம் சார்பில் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.